Tuesday, January 1, 2008

காத்திருக்கேன்..

ஆத்தோரம் வளர்ந்து நிற்கும்
அந்த ஒத்தை மரத்தடியில்
அச்சாரம் போட்டு வச்சு
அஞ்சாறு மாசமாச்சு

நாளாக நாளாக
நாணல் மட்டும் வளருதய்யா
நித்தம் நித்தம் உன் நினைப்பு
நெஞ்சுக்குள்ள ஏறுதய்யா!!

காலம் கனியட்டும் எனக்
காத்திருந்து காத்திருந்து
நாளெல்லாம் நகருதய்யா
நெஞ்சம் ஏனோ ஏங்குதய்யா

மனையோடு பந்தல் வச்சு
மாலை மாத்தி மேளம் கொட்டி
ஊரறிய உலகறிய உன்
கைப்பிடிக்கக் காத்திருக்கேன்!!

நெஞ்செல்லாம் நெனப்போட,
கண்ணெல்லாம் கனவோட,
மனசெல்லாம் ஆசை வச்சு..
மன்னவனே காத்திருக்கேன்!!

2 comments:

ibi said...

wow a classic poem..

kailashnath.B said...

real elite one...try like these more...u r real good at this...