Tuesday, January 1, 2008

ஏனோ தோன்றவில்லை...

கலைந்து கிடந்தது...
மேகம் கொண்ட வானம் மட்டுமல்ல...
என் நினைவும் மனமும் தான்!
மேகத்தினின்றும் சிந்திய மழைத்துளி
மண்ணைச் சேர்ந்ததோ...
சிப்பிக்குள் முத்தாய்ப் போனதோ!
என்னுள் விழுந்த நீ மட்டும்
நினைவில் நிலைத்து...
மனதில் நிறைந்து விட்டாய்!!
சிந்திய மழைத்துளி சென்ற இடம் தேடும் மனதுக்கு...
தான் தொலைந்து போன இடம் தேட ஏனோ தோன்றவில்லை!!!

No comments: