Monday, December 31, 2007
பூவின் கண்ணீர்
புன்னகை பூக்கும் பூக்களைக் கொண்டு
மாலைகள் ஆக்கிடுவார் - அவர்தம்
மார்பினில் சூடிடுவார்.... அந்தப்
பூக்களின் கண்ணீர் தேனாய்ச் சொரிவதை
எவர்தான் நோக்கிடுவார்???
Thursday, December 27, 2007
ஒரு துளி கண்ணீர்
பார்வைகள்
வான் பார்த்து காத்து நின்ற உழவனுக்கு
சிந்தும் மழைத்துளி லாபம்!
உலகமறியா மழலை முகத்திற்கு
கப்பல் விட்டு மகிழ்ந்தாட ஒரு துணை!
காய்ந்து நிற்கின்ற பயிருக்கு
பூமி சேர்கின்ற மழைத்துளி உயிர்த்துளி!
பணம் தேடி அலையும் மனிதருக்கு
வான தேவனின் கொடை ஒரு தடை!
ஒற்றை நிகழ்வில்
எத்தனை விதமான பார்வைகள்!!
பார்வைகள் மாறிடினும்
மழையின் பயணம் மட்டும்
மாறுவதில்லை.... முடிவதில்லை!!!
நீ.... நான்....
நீ நடந்து சென்ற பாதையில்...
காலடித் தடமாய் நான்...
நீ தொட்டு விளையாடிய அலைகடலில்...
அலைக் கரங்களாய் நான்...
நீ வெயிலில் நடந்து செல்லுகையில்...
மர நிழலாய் நான்...
நீ துயிலுறங்க உனைத் தாலாட்டும்...
மெல்லிய இசையாய் நான்...
நீ பசியாற உணவளிக்கும்...
செடி கொடியாய் நான்...
நீ குளிர் காய இதம் தரும்...
தீப்பிழம்பாய் நான்...
உன் வாழ்வில் ஒரு பொருளாய் நான்!!
என் வாழ்வின் பொருளே நீ!!!!
காலடித் தடமாய் நான்...
நீ தொட்டு விளையாடிய அலைகடலில்...
அலைக் கரங்களாய் நான்...
நீ வெயிலில் நடந்து செல்லுகையில்...
மர நிழலாய் நான்...
நீ துயிலுறங்க உனைத் தாலாட்டும்...
மெல்லிய இசையாய் நான்...
நீ பசியாற உணவளிக்கும்...
செடி கொடியாய் நான்...
நீ குளிர் காய இதம் தரும்...
தீப்பிழம்பாய் நான்...
உன் வாழ்வில் ஒரு பொருளாய் நான்!!
என் வாழ்வின் பொருளே நீ!!!!
கடன்
கொடுத்ததைத் திரும்பப் பெறும் வழக்கம்
எனக்கு இல்லை..
இதை அறிந்து தானோ என்னவோ...
என் உயிரைப் பறித்துச் சென்றாய்...
என் உயிர் இனி எனக்குத் தேவையில்லை...
உன்னால் நான் இன்று முதல் அமரன்!!!
எனக்கு இல்லை..
இதை அறிந்து தானோ என்னவோ...
என் உயிரைப் பறித்துச் சென்றாய்...
என் உயிர் இனி எனக்குத் தேவையில்லை...
உன்னால் நான் இன்று முதல் அமரன்!!!
கைதி
இன்று முதல் நீ ஆயுள் கைதி...
என் ஆயுள் வரையில் என் மனச்சிறையில்!!
காரணம், உன் கூர்விழியால்
என்னைக் குத்திக் கொன்றாயே... அதற்காக!!!
என் ஆயுள் வரையில் என் மனச்சிறையில்!!
காரணம், உன் கூர்விழியால்
என்னைக் குத்திக் கொன்றாயே... அதற்காக!!!
மாறுபாடு
மறுபிறவி
விடியல்
Subscribe to:
Posts (Atom)