Monday, December 30, 2013

பூமிப்பெண்ணின் காதல்..

இருளோடு பிரிந்திருந்த 
கதிரவக் காதலனின்
முதல் முதல் தீண்டலில் 
அவன் கதிர்க் கரம் சேர்ந்து 
மார்புச் சூட்டில் முகம் புதைத்து
தினம் பனித்துளி கண்ணீர் சிந்துகிறாள்
பூமிப்பெண்!