Tuesday, March 10, 2009

எங்கே??

நிலவொளியினின்று நிலத்தில் இறங்கிய
பாதம் சென்ற திசை தேடி - மனம்
திசை மாறிப் போனதென்ன!!

கடலலையில் அவன் நினைவும்
கலந்தே தான் அடிக்கின்றதோ??

இளங்காற்றின் தீண்டலிலே அவன்
ஸ்பரிசமும் நிறைகின்றதோ??

பூக்களின் இதழ் விரிகையிலே
அவன் புன்னகையே பூக்கின்றதோ??

நீரோடை சலசலப்போ - என்
மன்னவனின் பேச்சொலியோ??

கண்ணாடியில் என் பிம்பம்
அவனுருவாய் ஆனதென்ன??

கேள்விகளுக்கு விடை தேடி - என்
உயிர் பறந்து போனதெங்கே??

விடை கொண்டு சேர்த்ததோ
என்னவனின் உயிரன்றோ!!!