Thursday, December 27, 2007

நீ.... நான்....

நீ நடந்து சென்ற பாதையில்...
காலடித் தடமாய் நான்...
நீ தொட்டு விளையாடிய அலைகடலில்...
அலைக் கரங்களாய் நான்...
நீ வெயிலில் நடந்து செல்லுகையில்...
மர நிழலாய் நான்...
நீ துயிலுறங்க உனைத் தாலாட்டும்...
மெல்லிய இசையாய் நான்...
நீ பசியாற உணவளிக்கும்...
செடி கொடியாய் நான்...
நீ குளிர் காய இதம் தரும்...
தீப்பிழம்பாய் நான்...
உன் வாழ்வில் ஒரு பொருளாய் நான்!!
என் வாழ்வின் பொருளே நீ!!!!

1 comment:

Unknown said...

supera irukku....

Karthika n mehala