காதலை உறுதி செய்த
காதலர் தினத்தை மறக்கவில்லை...
"கடலையோடு இதையும் போடுங்கள்!"
என்று சொன்ன சுண்டல் பையனையும் மறக்கவில்லை...
"இப்பவாவது கிளம்புங்களேன்!" என்று
கெஞ்சிய பூங்கா காவலாளியை மறக்கவில்லை...
"மனசுக்கு பிடிச்சவளுக்கு பிடிச்ச
மல்லிப்பூ வாங்கி குடு சார்!"
என்று சிரித்த பூக்காரம்மாவையும் மறக்கவில்லை...
ஆனால் காதலித்து கரம் பிடித்த இருவரும்
திருமணத்தின் பின் காதலைத் தான் ஏனோ மறந்து விடுகிறார்கள்!!!
📹 How To Watch Muriel Online
5 years ago
1 comment:
successful love, ends in fight afetr marriage, beacause they forgot their love as u said....
nice one....
Post a Comment