Monday, December 29, 2008

எதற்கு???

கடற்கரை மணலில் உன் கால் தடம்
என் நினைவினில் ஏனோ நிலைத்திடும்...
நீ குப்பையென கசக்கிய தாள்கள்
உன் ஞாபகமாய் என்றும் நின்றிடும்...
மை தீர்ந்த பேனா நீ தூக்கி எறிய
அது என் செல்வமாய் ஏனோ மாறிட...
உனக்கு தேவை நீங்கிய குப்பைகள் எல்லாம்...
ஏனோ என் காதல் கோபுரத்தின் கலசங்களாய்!!!
உன் சிறு ஓரப் பார்வை...
அந்த மௌனப் புன்னகை...
ஒற்றைச் சொற்கள்...
அனைத்தும் என் பொக்கிஷமாய்!!!
சின்னச் சின்னதாய் உன் சின்னங்கள்...
சேமிக்கிறேன் என் நெஞ்சில்...
உன்னிடம் மொழியத்தான் வழியில்லை...
என் நாவில் ஏனோ மொழியில்லை...
பெண் மனம் புரியாதா உனக்கு??
இன்னும் மௌனம் நம்மிடையில் எதற்கு?

1 comment:

asia_aravind said...

kavithai rely very super . it touch my heart deaply