அமைதி என்றும் இனித்ததில்லை...
உன் மௌனம் ஏனோ இனிக்கிறதே!
புயல் என்றும் பிடித்ததில்லை...
உன் கோபங்கள் ஏனோ பிடிக்கிறதே!
மனித மனம் என்றும் புரிந்ததில்லை...
உன் எண்ணம் மட்டும் புரிகிறதே!
நிலவை என்றும் ரசித்ததில்லை...
உன் முகம் தனித்தே தெரிகிறதே!
அலைகடல் நினைவில் நிலைத்ததில்லை...
உன் பேச்சு மட்டும் நிலைக்கிறதே!
துணையை என்றும் விழைந்ததில்லை...
உன் துணை மனம் ஏனோ தேடிடுதே!
மரணம் என்றும் மறுத்ததில்லை...
உன் மனம் என் திசையைத் திருப்பியதே!
வாழ்வை என்றும் விரும்பியதில்லை...
உன் வரவு என்னை மாற்றியதே!
என்னை என்றும் உணர்ந்ததில்லை...
உன் காதல் என்னை உணர்த்தியதே!!!
📹 How To Watch Muriel Online
5 years ago
1 comment:
too good... Bravo!!
Post a Comment