Wednesday, April 16, 2008

வழி மேல் விழி வைத்து...

என் நெற்றிச் சிந்துரம் இடுகையிலே
உன் நினைவுகள் நெஞ்சில் நிறையுதடா!
நீ இட்ட குங்குமம் நிலைப்பதுவே
நித்தம் மனம் உருகி வேண்டுதடா!
கண்ணில் நீர் வழிந்தோட
தினம் உன் வரவை எண்ணியே ஏங்குதடா!
தாயும் தாரமும் தவித்திருக்க,
தாயகம் காக்க புறப்பட்ட உன்னை
வீர பத்தினியாக போர் முனைக்கு
அனுப்பிட மட்டுமே மனம் துணிந்ததடா!
நின்னை நீங்கி நிற்கும் வாழ்வில் ஆசையில்லையடா!
நின்னை, என் உயிரைத் திரும்பப் பெறுவேனா?
நினைக்கையில் மனம் கதறி குமுருதடா!
வாராயோ! என் கணவா!! விரைவில் வந்து
என் மனக் குறையைத் தீராயோ....
விழிகளை வழி மேல் வைத்திருப்பேன்....
நீ வரும் நொடிக்காகக் காத்திருப்பேன்....

No comments: