Sunday, April 6, 2008

விடியலே வா!!!

எந்தன் எண்ணத்தின் பிம்பமே! வா...
என் அருமை இளமகளே! வா...
உன்னை வரவேற்க - உன்
அன்னை அருமையாகக் காத்திருக்கிறேன்!
"பெண்ணாகப் பிறந்தாயே.. சீ! சீ!" என்பர்...
துவளாதே! சாதிக்கப் பிறப்பவள் நீ!
"அடுப்பூதப் பிறந்தாய் நீ!" என்பர்...
நடுங்காதே! நாளைய நம்பிக்கை நீ!
குரலெடுக்க உரிமையில்லை...
உரிமைகள் அளிக்க ஓர் உலகுமில்லை...
தயங்காதே... தடைகளைத் தகர்த்தெறி...
தலையில் குட்டி, உயராது தடுக்க...
புறப்படும் பல படைகள்!!!
பகைவர்கள் பலர் படையெடுத்தாலும்
நம்பிக்கைத் தர நானிருக்கிறேன்....
கண்ணில் கனவுகள் பல...
நெஞ்சின் வேதனைகள் பல...
நினைவின் கருநிழல்கள் பல...
கருவாய் அல்ல - உன்னைக்
கனவாய்ச் சுமக்கிறேன்....
உன் வரவில்...
என் லட்சியங்களின் விடியல்!!!
லட்சியங்கள் நிறைவேற்ற....
நம்பிக்கை ஒளியேற்ற....
எதிர்காலம் தழைக்க....
பெண் சமூகம் செழிக்க....
என் கிழக்கின் உதயமே வா!!!
என் நம்பிக்கைச் சுடரே வா!!!
என் வாழ்வின் விடியலே வா!!!

5 comments:

Priyanka Agrawalla said...

Hey BS.. u have very well portrayed... excellent work.... touching... keep up yaar.....

vijayaragavan v said...

pen viduthalaikaha bharathi kural kuduthan..indru ne..
vazhthukkal..

ibi said...

a great work, ur rocking

ibi said...

a great work, ur rocking

kailashnath.B said...

This would have sounded awesome 50 years bac...women r more sterner n ambitious these days n it goes without sayin...good work though